மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு!
Monday, January 16th, 2017ஊடக சுதந்திரம் தொடர்பான மக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி மக்கள் தங்களின் கருத்துக்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தெரிவிக்க முடியும் எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் (14) நிறைவடைந்திருந்தது.உயர் தரத்திலான ஊடக கலாசாரத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஊடக சுதந்திரத்தையும் தராதரத்தையும் உறுதிப்படுத்துவதற்காக பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முச்சக்கர வண்டி விபத்து:ஒருவர் படுகாயம்!
வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றப் பட்டியல் வெளியீடு 221 பேருக்கு மாற்றம் 419 பேரின் விண்ணப்பம் நிராகரி...
அனைத்து தரப்பினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை அமைப்பதே நோக்கம் – ஜ...
|
|