பொம்மை வெளி வாய்க்கால் சீரமைப்பு!
Monday, October 31st, 2016
பொம்மை வெளியில் வெள்ளம் வழிந்தோட வசதியாக அராலி வீதியிலுள்ள வெள்ள வாய்க்காலை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்.மாநகராட்சி மன்றம் நீண்ட நாட்களின் பின்னர் இந்த வெள்ள வாய்க்காலை துப்பரவாக்கி சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளது. இந்தப் பகுதியில் வெள்ளம் வாய்க்காலுக்கு வழிந்தோட வசதியாக, வெள்ளம் தள்ளி, என்று கூறப்படும் இந்த வாய்க்கால் புனரமைக்கப்பட்டு வருகின்றது என்று மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்த வெள்ளம் தள்ளி வாய்க்கால்கள் பல நாட்களாக திருத்தம் செய்யப்படாமல் இருந்தன. தற்போது மாநகர தொழிலாளர்கள் இந்த வாய்க்காலைச் சீரமைத்துள்ளனர்.
Related posts:
போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கழி அமோக விற்பனை - பனை அபிவிருத்திச் சபை!
கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட வீதி விபத்துகளால்45 பேர் பலி - 266 பேர் படுகாயம்!
இலங்கை போக்குவரத்து சபையில் 285 ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுறுதி - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...
|
|