பொதுப் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
Sunday, June 30th, 2024
பொதுப் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி பயணிகளுக்கும் பொருட்களுக்குமான பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து!
பெயர் இல்லை என்றால் 19 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
கொரோனா நிலையமாக மாற்றப்படும் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லூரி !
|
|
|


