புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகளது கல்வியை மேம்படுத்த நிதியுதவி!

Saturday, February 4th, 2017

வெளிநாட்டு வேலை வாய்ப்புத்துறையில் முகவர்களாக தம்மை அறிமுகம்செய்துகொண்டு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இத்தகைய நபர்கள் முறைகேடான வழிகளில் ஸ்ரீலங்கா பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும், இதன் காரணமாக பணிப்பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலையில் இடம்பெற்ற, வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்று பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட ஸ்ரீலங்கா தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளது கல்வியை மேம்படுத்தும் வகையில் இந்த வேலைதிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு பிரதேச செயலாளர் அலுவலகங்களில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதொடு, பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் பற்றி ஒவ்வொரு மாதமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

tha

Related posts: