புதியவகையில் ரயில்பஸ் சேவை ஆரம்பம்!
Sunday, January 15th, 2017
பயணிகளின் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பேராதெனிய மற்றும் கம்பளை புகையிரத நிலையங்களுக்கு இடையில் ரயில்பஸ் சேவை ஓன்று தைப்பொங்கல் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது
சனநெரிசல் மிக்க பிரதேசங்களில் பயணிகளின் நலன் கருதி குறித்த ரயில்பஸ் சேவையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய இந்த சேவை முன்னெடுக்கப்படுகிறது.
இந்தநிலையில், திருக்கோணமலை – கல்ஓய, மட்டக்களப்பு – கல்ஓயா, சிலாபம் – புத்தளம், அனுராதபுரம் – மதவாச்சி, குருணாகலை – மஹவ – பேராதனை – கண்டி, கண்டி – கொஸ்கம ஆகிய நகரங்களுக்கு இடையில் குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
Related posts:
லஞ்சீற், பிளாஸ்ரிக் போத்தல்கள் இனிமேல் பாவிக்கப்பட மாட்டாது!
எலிக்காய்ச்சலால் 3317 பேர் பாதிப்பு – சுகாதார அமைச்சு!
தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தங...
|
|