புகையிரதத்தில் மோதி இளைஞர் பலி!

Tuesday, August 2nd, 2016

இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டகளப்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்  என தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு புன்னசோலையை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. . சடலம் அடையாளம் காணுவதற்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: