பிணைகள், முறிகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களின் விபரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Saturday, December 30th, 2017

சர்ச்சைக்கரியதாகக் கருதப்படும் மத்தியவங்கியின் பிணைகள். முறிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தமத அறிக்கையை 31அம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளது என அந்த ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய தெரிவித்துள்ளார்.

அச்சிடுவதில் சிக்கல் நிலவுகின்றது. ஆனால்  இருந்த  போதும், எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர்  அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆணைக்குழு ஜனாதிபதியினால் இந்த வருடம் ஜனவரி 27ம் திகதி நியமிக்கப்பட்டமை  குறிப்படத்தக்கது

அத்துடன் அதன் அதிகாரக்காலம் கடந்த 8ம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அது எதிர்வரும் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது

Related posts: