பாவனையாளர் அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் வழக்குகள் பதிவு!

Saturday, December 31st, 2016

யாழ் மாவட்டத்தில் பாவனையாளர் அதிகார சபையினால் நவம்பர் மாதம்  95 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  இதற்கான தண்டப்பணமாக 436 500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதென யாழ் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின்  பொறுப்பதிகாரி  வசந்தசேகரம்  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த மாதம்  சிகையலங்கார கடைகளை புலனாய்வு செய்ததில் காலாவதியான பொருட்களை பயன்படுத்தியமைக்காக   இரு  வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.   புடவைக்கடைகளில் விலை விபரம் காட்சிப்படுத்தமையினால் சுமார் 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

cd3414c88a8fe15e414eea3827174aea_L

Related posts: