பல்வேறு பகுதிகளில் இன்று மின்சார விநியோகத் தடை!

Saturday, June 10th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்சாரவிநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளின் காரணமாக இந்த மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது

காலை 8.30 முதல் மாலை 5.30 வரை யாழ்ப்பாண மாவட்டத்தின் துரையப்பா விளையாட்டரங்கு, நுணாவில், கைதடி, நாவற்குழி, புன்னாலைக்கட்டுவன் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்படவுள்ளது

மேலும், பலாலி, மயிலிட்டி, பலாலி விமானப்படை முகாம், பலாலி இராணுவ முகாம், பலாலி விமானப்படை விடுதி மற்றும் கைதடி வடமாகாண சபை அலுவலகம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரவிநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது

Related posts:

மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள  மயானங்களை அகற்றக் கோரி   யாழில் தொடர் சத்தியாக்கிரகம்!
பி.சி.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டே பயணத் தடை நீடிப்பு தொடர்பில் தீர்மானிக்கப்ப...
தொடர் மழை - கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு - இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் உயர்வு!