பருத்தித்துறை நகர சபையின் திண்மக் கழிவகற்றலுக்கு ஒத்துழைக்கக் கோரிக்கை!

பருத்தித்துறையில் காணப்படும் திண்மக்கழிவுகளை உரிய முறைப்படி, உரிய நேரத்திற்கு ஒப்படைத்து சபையால் மேற்கொள்ளப்படும் நகர சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்தழைப்பு வழங்கவேண்டும் என பருத்தித்துறை நகரசபை செயலாளர் கோரியுள்ளார்.
அவர் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட திண்மக்கழிவுகள் உரிய முறையில் கையளிக்கும் வரை அவற்றை சுகாதார முறைப்படி பாதுகாப்பாக பேணப்படாமையும், ஆங்காங்கே பொறுப்பற்ற முறையில் வீசப்படுவதாலும் சுற்றாடல் மாசுபடுவது மட்டுமின்றி தொற்று நோய்த்தாக்கமும் நாளாந்தம் அதிகரிக்கப்படுகின்றது. அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பருத்தித்துறை நகர சபையால் மேற்கொள்ளப்படும் திண்;மக்கழிவுகள் அகற்றும் சேவையானது தினமும் அதிகாலை 5 மணியிலிருந்து நடைபெறுகின்றது. திண்மக்கழிவுகளை உரிய முறைப்படி உரிய நேரத்திற்கு ஒப்படைத்து சபையின் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Related posts:
|
|