பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்!

Thursday, March 18th, 2021

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும்  தெரிவித்துள்ள அவர் தொற்றுநோயின் பரவல் தொடர்ந்தாலும் பொதுமக்களுக்கு பண்டிகையைக் கொண்டாட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கே இலங்கையில் வைரஸ் பரவல் காணப்படுவதால் இது சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் இன்னும் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் பண்டிகைக் காலங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொருட் கொள்வனவில் ஈடுபடும்போதும் வெளியில் செல்லும்போது தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை கண்டிப்பாக பின்பற்றவும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

000

Related posts: