பண்டிகைக் காலத்தில் விசேட பஸ் சேவைகள்!

Monday, April 3rd, 2017

புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் நலன்கருதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர இது தொடர்பாக தெரிவிக்கையில் .  இந்த பஸ் சேவைகள் எதிர்வரும் 21ம் திகதி வரை இடம்பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்தாக தெரிவித்தார்.

இது தொடர்பில் பஸ் சங்கங்கள், பயணிகள் போக்குவரத்து அதிகார சபைகள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை இன்றும் நாளையும் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மேலதிக பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பயணிகள் தொலைபேசி ஊடாக தமது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அழைக்க வேண்டிய இலக்கம் 1955 என்பதாகும்.

Related posts: