நியமனம் பெற்று 4 மாதத்துக்குள் 800 ஆசிரியர்கள் இடமாற்றம்!
Wednesday, November 2nd, 2016ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கற்று, ஆசிரியர்களாக அண்மையில் புதிதாக நியமனம் பெற்றவர்கள், கடந்த 4 மாத காலத்துக்குள் 800 பேர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாக இலங்கை ஆசியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் புதிதாக சுமார் 3 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களே தங்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து இடமாற்றம் பெற்றுள்ளனர். புதிய ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கியுள்ளதனால், பல வருடங்களாக தூர இடங்களில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம் பெறமுடியாதுள்ளதாகவும், அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை படிப்படியாக வழமைக்கு - இலங்கை மத்திய வங்கி!
அரிசி இறக்குமதி செய்ய ஒருபோதும் அனுமதிக்கப்படாது - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
வசந்த முதலிகே உள்ளிட்ட 5 பேருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட சந்தர்ப்பம்!
|
|