நாட்டில் நிலவும் அதிகரித்த வெப்ப நிலையால் தேயிலை செய்கையில் வீழ்ச்சி!
Monday, March 28th, 2016தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையால் தேயிலை செய்கையில் நூற்றுக்கு 50 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக சங்கத்தின் பிரதான ஏற்பாட்டாளர் லால் பிரேமநாத் குறிப்பிட்டார்.
சில தேயிலை தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை எதிர்பார்ப்பதாகவும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெருமளவு அந்திய செலாவணியை ஈட்டுவதற்கு பங்களிப்பு செய்யும் தேயிலை தோட்ட செய்கையாளர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Related posts:
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்
யாசகம் கேட்கும் பௌத்த பிக்குகள்!
அனைத்து வீதிகளினதும் தரம் தொடர்பில் ஆராய விசேட பிரிவு ஸ்தாபிக்க நடவடிக்கை - அமைச்சர் திலும் அமுனுகம ...
|
|