நாட்டில் அமைதி, நல்லிணக்கம் என்பன ஏற்பட வேண்டி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை நோக்கிப் பாதயாத்திரை!

Friday, October 14th, 2016

பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த இரதோற்சவம் இன்று இடம்பெறுவதை முன்னிட்டு இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபை நாட்டில் அமைதி, நல்லிணக்கம் என்பன ஏற்பட வேண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து நேற்று (13) காலை-09.30 மணியளவில் திருத்தல பாதயாத்திரை நிகழ்வை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பாதயாத்திரை சிவலிங்கம் தாங்கிய ஊர்தி, மற்றும் பஜனை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிப் பருத்தித் துறை வீதியூடாக ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தேர்த் திருவிழாவான இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த பாதயாத்திரை ஆலயத்தைச் சென்றடையும்.

unnamed (1)

Related posts: