நாடாளுமன்றத்திற்கு வருகின்றது கோப்குழுவின் விசேட அறிக்கை!

Saturday, July 2nd, 2016

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விற்பனை சம்பவம் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய அறிக்கை அடிப்படையாக கொண்டு கோப் குழு அறிக்கை ஒன்றை ஜூலை மாத இறுதிக்குள் தயாரித்து அதனை நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய அறிக்கை தொடர்பில் அவரிடம் மேலதிக விடயங்களை தெளிவுப்படுத்திக் கொள்வதற்காக கோப் குழு எதிர்வரும் செவ்வாய் கிழமை கூட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி விடயங்களை தெளிவுப்படுத்தி கொள்ளும் தேவை கோப் குழு உறுப்பினர்களுக்கு இருந்தால், 6 ஆம் திகதி புதன் கிழமையும் கூடுவது என கோப்குழு தீர்மானித்துள்ளது.

இந்த விடயங்கள் அனைத்தையும் அடிப்படையாக கொண்டு கோப் குழு விசே அறிக்கையை தயாரிக்க உள்ளது. ஜூலை இறுதியில் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Related posts: