நாடக ஒத்திகைக்கு வாள் எடுத்துச் சென்ற ஆசிரியரும் மாணவனும் சந்தேகத்தில் கைது!

Monday, October 31st, 2016

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியால் வாள் இரண்டினை எடுத்துச் சென்ற ஆசிரியர் ஒருவரையும் மாணவன் ஒருவனையும் சந்தேகத்தில் நேற்று யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்தள்ளனர்.

நல்லூர் செம்மணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று நாடக ஒத்திகை ஒன்று இடம்பெறவிருந்தது. இதற்காக குறித்த ஆசிரியர் மாணவனை அழைத்துக் கொண்டு வீதியால் சென்றுள்ளார். இதன்போது வீதி ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவரையும் சந்தேகத்தில் கைது செய்திருந்ததுடன் வாள்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தாம் இருவரும் நாடக ஒத்திகை ஒன்றிற்கு செல்வதாக பலமுறை கூறிய போதும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் சந்தேகத்தில் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக குறித்த ஆசிரியர் கவலை தெரிவித்துள்ளார். பொலிஸாரின் இந்த நடவடிக்கையினால் நடைபெறவிருந்த நாடக ஒத்திகையில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் கவலை தெரிவித்துள்ளார்.

arrest 85ddd61

Related posts:

தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதியில் மீண்டும் மாற்றம் – வரையறுக்கப்பட்ட மாணவருடன் சமூக இடைவெள...
பொதுமக்களின் அமைதியை பாதுகாக்குமாறு ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி உத்தரவு!
தேர்தலுக்குத் தேவையான பணத்தை பெறுவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப...