நயினாதீவில் கஞ்சா மீட்பு!
Friday, September 2nd, 2016
நயினாதீவு கடற்பரப்பில் 10 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று வியாழக்கிழமை இரவு நயினாதீவு கடற்பரப்பு பகுதியில் இருந்த கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கஞ்சாவினை கடற்பரப்பில் வைத்த சந்தேகநபர்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்றும், எவரையும் இதுவரை கைதுசெய்யவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். மீட்க்கப்பட்ட கஞ்சா குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
கிழக்கின் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் படையினர் இல்லை – பாதுகாப்புச் செயலாளர்
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அட்டூழியம்!
சரியானதைச் செய்ய சட்டம் ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட...
|
|