தொழில் அலுவலகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கும் வரையறை!
Monday, May 3rd, 2021
தொழில் திணைக்களமானது அதன் தலைமைச் செயலகம் மற்றும் மாகாணம் மற்றும் மாவட்ட தொழில் அலுவலகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை வரையறைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியத்தை கோருவதற்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் தொழில் திணைக்களத்தின் இணையதளத்தின் ஊடாக தங்களுக்கு பொருத்தமான திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளுமாறும் ஆணையாளர் தெரிவித்துள்ளார் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே அனைத்து மிருககாட்சிசாலைகள், சபாரி பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயம் என்பன மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
பிரெண்டிக்ஸ் கொத்தணிக்கு இன்றுடன் 14 நாட்கள் பூர்த்தி – அடுத்த ஒருவாரம் தீர்மானம் மிக்க காலமாக இருக...
ஏப்ரல் மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு வெளியாகும் - கல்வி அமைச்சர் பீரிஸ்!
இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்...
|
|
|


