தேயிலை உற்பத்தியில் 5 சதவீதத்தால் இலங்கை உயர்வு
Saturday, January 27th, 20182016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இல் தேயிலை உற்பத்தி 5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்குக் காரணம் அரசாங்கம் கடந்த காலத்தில் தேயிலைத் தொழிற்துறைக்கு வழங்கிய நிவாரண உதவிகள், பரந்துபட்ட சேவை மற்றும் தேயிலை உற்பத்திக்கான சிறந்த காலநிலை என்பனவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திசாநாயக்கவின் தலைமையில் தேயிலை ஏற்றுமதியின் தற்போதைய நிலைமை குறித்தும் தேயிலை தொழில்துறையின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜனவரி முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை!
இன்றும் நாளையும் மழையுடனான காலநிலை தொடரும் – வானிலை அவதான நிலையம்!
அதிவேகம் – கட்டுப்பாட்டை இழந்து கல்லுண்டாயில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து குடைசாய்ந்தது!
|
|