துன்னாலையில் உயிரிழந்த 24 வயது இளைஞரின் உடல் புதைக்கப்பட்டது 

Wednesday, July 12th, 2017

யாழ். வடமராட்சி  கிழக்கு, குடத்தனைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த ஹன்ரர் வாகனத்தைப் பொலிஸார் வழிமறித்த போது குறித்த வாகனம் நிற்காமல் சென்றது. இதன் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ்.துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞரொருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, குறித்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து அந்தப் பகுதியில் பெருமளவு விஷேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும்  குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல்- 11 மணியளவில் இடம்பெற்று வேடுண்டை மயானத்தில் சடலம் புதைக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

 

Related posts:


மக்களை மறந்தமையினால்தான் ஐ.தே.க.வுக்கு இத்தகைய பரிதாப நிலை ஏற்பட்டது - அக்கட்சியின் முன்னாள் நாடாளும...
முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத்...
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பலி – பொதுக் கல்வ...