தீக்காயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

Wednesday, May 4th, 2016

தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பைப் பற்ற வைப்பதற்கு மண்ணெண்ணெய் ஊற்றிய போது  குடும்பப் பெண்மணியொருவர் உடலில் தீக் காயங்களுக்கு இலக்கான சம்பவம் நேற்றுச் செவ்வாய்க் கிழமை (03-05-2016) மதியம் யாழ்ப்பாணம் அபூபக்கர் வீதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண்மணி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் பிரபாகரன் தயாபதி (வயது-40) என்ற குடும்பப் பெண்மணியே தீக் காயங்களுக்கு இலக்கானவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: