தீக்காயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி
Wednesday, May 4th, 2016தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பைப் பற்ற வைப்பதற்கு மண்ணெண்ணெய் ஊற்றிய போது குடும்பப் பெண்மணியொருவர் உடலில் தீக் காயங்களுக்கு இலக்கான சம்பவம் நேற்றுச் செவ்வாய்க் கிழமை (03-05-2016) மதியம் யாழ்ப்பாணம் அபூபக்கர் வீதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண்மணி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் பிரபாகரன் தயாபதி (வயது-40) என்ற குடும்பப் பெண்மணியே தீக் காயங்களுக்கு இலக்கானவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்படும் - அமைச்சர் பந்துல குணவர்தன!
நான் தேசிய பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இருக்கவில்லை - ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்...
தேசிய தொழிலதிபர்களை ஊக்குவிக்க கடன் வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !
|
|