தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 674 பேர் கைது – பொலிசார் தகவல்!

Wednesday, September 8th, 2021

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 67 ஆயிரத்து 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்முதல் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 674 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேல் மாகாணத்தில் 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடன் சலுகை பெற்றுக் கொண்டவர்களது தகவல்களை வழங்குமாறு இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் அனைத்து வங்கிகளிட...
பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்துச் செல்ல எந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து நிதி...
இலங்கைக்கு புதிய தொழில் வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் - கொரிய பிரதமர் ஹான் டக் சூ உறுதிய...