தகவல்கொடுத்தவருக்கு கிடைத்த அதிஷ்டம்!

Monday, December 19th, 2016
கென்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கு தகவல் வழங்கிய நபருக்கு 40 லட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

111 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றுவதற்கு பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபருக்கு இன்று பொலிஸ் மா அதிபரினால் இந்த 40 இலட்சம் ரூபா பணம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கென்யாவில் இருந்து கப்பல் ஒன்றில் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள், தனிநபரினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மீட்கப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 98 அதிகாரிகளுக்காக ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Dollar_22

Related posts:

கப்ராலின் பொறுப்பில் இருந்த பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன - அதிவிசேட வர்த்தமானியும் வெளி...
இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் விசா கால எல்லை 5 வருடங்களாக...
மஹிந்த ராஜபக்ஷ - பான் கீ மூனன் இடையில் எட்டப்பட்ட சில இணக்கப்பாடுகப்பாடுகளை நிறைவேற்ற உறுதியாக இருப்...