டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – ஆண்டின் மதல் மாதத்தில் 300 பேருக்கு யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை!

Sunday, January 29th, 2023

இலங்கையில் இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளிகளின் தொகையானது 2021ஆம் ஆண்டு இலங்கையில் ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு சமனாக காணப்படுவதாக யாழ் போதனா வைத்திய சாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா தெரிவித்துள்ளார்

வடக்கில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைமிகவும்  அதிகரித்து காணப்படுகின்றது அதேபோல யாழ் போதனா வைத்தியசாலையிலும் 2023 ஆம் ஆண்டு தை மாதம் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 300 ஆக காணப்படுகின்றது. இதில் 33சத வீதமானவர்கள் சிறுவர்களாக காணப்படுகின்றார்கள்

2022 ஆம் ஆண்டு தை மாதம் 200 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் கடந்த வருட தை மாதத்துடன்  ஒப்பிடும்போது இவ்வருடம் 50% அதிகமாக காணப்படுகின்றது எனவே  டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை செய்யாவிட்டால் இந்த வருடம் சுமார் 2000 டெங்கு நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்ககூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

எனவே டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் முக்கியமாகும் குறிப்பாக டெங்கு நோய் அதிகம் பாதிப்பதுசிறுவர்களையே எனவே சிறுவர்களுடைய பெற்றோர்கள் இதில் கவனம் எடுக்க வேண்டும்.

டெங்கு நோயானது சிறுவர்களை குறிப்பாக 15 வயது க்குட்பட்டவர்களை மிகவும் கடுமையாக பாதிக்கின்றது. அடுத்ததாக வயது முதிர்ந்தவர்களை பாதிக்கின்றது. அடுத்ததாக உடற்பருமன் உடையவர்கள் சலரோக நோயுடையவர்கள் அஸ்மா நோயுடையவர்களை பாதிக்கின்றது

எனவே டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மிக முக்கியமாகும் அடுத்ததாக டெங்கு  நுளம்பு  மூலம் தொற்றுகின்றது   வீதிகளில் கழிவுகள் காணப்படுதல் மிக முக்கியமான பிரச்சனை 90விதமான மக்கள் வீதிகளில் கழிவுகளை வீசும் போது அதில் நுளம்பு பெருகுவதனால்  டெங்கு நுளம்புஅதிகம் பரவுகின்றது.

குறிப்பாக சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள் கடந்த வருடம் சுமார் ஐந்து பேர் டெங்கு நோயினால் யாழ்ப்பாணத்தில் இறந்துள்ளார்கள்

எனவே இவ்வருடம் இவ்வாறான இறப்புகள் ஏற்படாது இருப்பதற்கு நமக்கு முதல் தேவை டெங்கு பெருகும் இடங்களை அகற்றுதல் வேண்டும் அதாவது சுத்தப்படுத்தல் வேண்டும்

அண்மை காலங்களில் டெங்கு நோய் பெருகுமிடங்கள் சுற்றுச்சூழல் சுகாதாரம் மிக முக்கியமாகும் அவற்றினை டெங்கு விழிப்புணர்வு வாரம் மூலம் பொதுச் சுகாதார பரிசோதரர்கள் மூலம் செய்கின்றோம்

புதிது புதிதாக கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன அவை அரைகுறையாக இருக்கும்போது அதில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான சாத்திய கூறுகள் உண்டு

யாழ் நகருக்கு அப்பால் புதிய நகரங்கள் போல கடைகள் கட்டப்படுகின்றன  தோட்ட காணிகளில் வீடுகள் மண்டபங்கள் கடைகள் கட்டும்போது அங்கு  நுளம்பு பரவுவதற்குரிய சூழல் அதிகரித்து காணப்படுகின்றது,

எனவே டெங்கு நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள சுற்றுச்சூழலை சுத்தமாக பேணுவதனால் டெங்கு நுளம்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்  என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும்  திருத்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி
வைதிதியர்கள் பற்றாக்குறை தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக முல்லை மாவட்ட அரச மர...
சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசின் நிதி போதுமானதாக உள்ளது - தேர...

 உங்களது கோரிக்கையை நிறைவுசெய்ய முயற்சிக்கின்றேன் – முன்னாள் காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர்...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை - இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ம...
13 ஆம் திகதிமுதல் 18 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கன மழை கிடைக்கும் வாய்ப்பு - ...