சேலைத் தலைப்பு மோட்டார் சைக்கிளின் சில்லுக்குள் அகப்பட்டமையால் இளம் ஆசிரியை காயம்
Sunday, May 21st, 2017
சேலைத் தலைப்பு மோட்டார் சைக்கிளின் சில்லுக்குள் அகப்பட்டுக் கொண்டமையால் சிலிப்பாகிக் கீழே விழுந்த இளம் ஆசிரியையொருவர் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை- 03 மணியளவில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது குறித்த ஆசிரியையின் சேலைத் தலைப்பு மோட்டார்ச் சைக்கிளின் சில்லில் சிக்குண்டதிலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மைதான வீதி, கோண்டாவில் தெற்கு கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஆசிரியையொருவரே காயங்களுக்கு இலக்கானவராவார்.
Related posts:
விரைவில் புதிய நீர்ப்பாசனக் கொள்கை – விஜயமுனி சொய்சா!
கிராம அலுவலரின் வீட்டுக்குள் அத்துமீறிய கும்பல் அட்டகாசம்! ஜன்னல், மோட்டார் சைக்கிள்கள் அடித்துடைப்...
அஞ்சல் அலுவலகத்தில் 5 இலட்சம் பதிவுத்தபால்கள் தேங்கியுள்ளன - கிடப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரி...
|
|