சீரற்ற காலநிலையால் மன்னார் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

மன்னாரில் இருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடான மட்டக்களப்பு வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புக்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதோடு, கடும் குளிர் காற்றும் வீசி வருகிறன்றது.
இதனால் மன்னார் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த கடும் காற்று காரணமாக மரங்கள் சில இடங்களில் முறிந்து விழுகின்றன.
எனினும், குறித்த மரங்களை வீதிகளில் இருந்து அகற்ற அதிகாரிகளால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இதனால் இவ்வீதியால் பயணிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தென்னை மரங்களுக்கு இடையில் தேங்காய் மட்டைக்குழி – வறட்சியை தடுக்க வழி இதுவே!
உவர்நிலங்களில் நெற்செய்கையை ஊக்குவிக்க செயற்றிட்டம் - முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப...
துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் காவல்துறையில் முறைப்பாட்டை அளிக்க சரியான சூழல் இல்லை - நிலைமையை நிவ...
|
|