சிறுமி கடத்தல் – தமிழ் நாட்டில் 7 பேர் கைது!

Monday, December 11th, 2017

ஈழச் சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்தக் குற்றச்சாட்டில் 7 பேர் கைதாகினர்.கைதானவர்களில் 4 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

கரூரில் ஏதிலிகள் முகாம் ஒன்றில் வசித்து வந்த குறித்த சிறுமிக்கு தொழில்பெற்றுத் தருவதாக கூறி அழைத்துச் சென்றவர்களே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து சிறுமி தப்பிவந்த நிலையில் அவரிடம் காணப்பட்ட காயங்களால் சந்தேகித்து காவற்துறையில் முறையிடப்பட்டது.இதன் அடிப்படையில் அவர்கள் கைதாகினர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: