சாரதியின் கவனயீனத்தால் வந்தது வினை: மதிலுடன்  மோதியதில் பலத்த சேதங்களுக்குள்ளான முச்சக்கர வண்டி

Friday, April 22nd, 2016

திருநெல்வேலி இராமநாதன் வீதியில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக நேற்று  (21-) பிற்பகல் -12.45 மணியளவில் முச்சக்கர வண்டி வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதியின் கவனயீனத்தால்  மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தில் குறித்த வாகனத்தில் சென்றவர்களுக்குக் காயங்கள் எதுவும் ஏற்படாத போதும் முச்சக்கர வண்டி வாகனம் பலத்த சேதத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

திருநெல்வேலியில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீ சத்தியசேவா நிலையத்தினர் ஸ்ரீ சத்திய சாயி ஆராதனா மஹோற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம்  பல்கலைக் கழகத்துக்கு முன்பாக நடமாடும் தாக சாந்தி நிலையம் அமைத்து கொளுத்தும் வெயிலில் களைப்புடன் வருகை தரும் பொதுமக்களுக்கு மோர் வழங்கும் சேவையைக் கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்படி சேவையில் ஈடுபட்டு விட்டு அருகிலுள்ள சாயி நிலையத்துக்குச் சென்று கொண்டிருக்கும் போது சடுதியாக வாகனத்தைத் திருப்பிய போதே அருகிலுள்ள வீடொன்றின் மதிலுடன் மோத வேண்டியேற்பட்டுள்ளது.

மேற்படி விபத்துக் காரணமாக உயிர்ச் சேதங்கள், சிறு காயங்கள்  எதுவும் ஏற்படாத போதும்  முச்சக்கர வண்டி வாகனத்தின் முன்பக்கம் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: