சர்ச்சைக்குரிய உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினை குறித்து கலந்துரையாடல்!
Sunday, September 11th, 2016
உடுவில் மகளிர் கல்லூரியில் எழுந்துள்ள அதிபர் மாற்றம் தொடர்பான பிரச்சினை குறித்து, பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கிடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதிபர் மாற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும், மாணவிகளின் கல்வி செயற்பாடுகளை அமைதியான முறையில் தொடர்வதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இக்கலந்துரையாடலில் உடுவில் மகளிர் கல்லூரியில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையில் கல்வி கற்கும் மாணவிகளது பெற்றோர்களை கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

Related posts:
அனைத்து மக்களுக்கும் இலவச வைத்திய பரிசோதனை- அமைச்சர் ராஜித சேனாரத்ன
வடக்கு விவசாயிகள் அன்னாசியில் ஆர்வம்!
மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி!
|
|
|


