சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகள் பூஸ்ஸவிற்கு இடமாற்றம் – சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, October 19th, 2020

சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகளை பிரித்தெடுத்து பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

பூஸ்ஸ சிறைச்சாலையை உயர் பாதுகாப்பு சிறைச்சாலையாக பிரகடணப்படுத்தும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் ஊடாக சமுதாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் விஷேட கவனம் செலுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: