சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்!
Thursday, May 26th, 2016
சட்டவிரோதமாக டுபாயிலிருந்து இலங்கைக்கள் சிகரெட்டுகளை கொண்டுவந்த நான்கு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் 90 ஆயிரம் சிகரெட்டுகளுடன் கைதுசெய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 31 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரட் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்களாவர். விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தெல்லிப்பழை - யூனியன் கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் - தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய பொலிஸார...
5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!
ஜூன் மாதத்தில் 16,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார ச...
|
|
|



