கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 15 பேர் கைது

Wednesday, May 11th, 2016

கோப்பாய்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 15 பேர் கோப்பாய்ப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

நேற்று முன்தினம் 09 ஆம் திகதி வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கோப்பாய்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் , உரும்பிராய் , நீர்வேலி  போன்ற பகுதிகளில் தேவையற்ற வகையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியவர்களைக்  கைது செய்து விசாரணை நடாத்தினர்.

பொலிஸாரின் விசாரணையின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறியமை , முன்னுக்குப் பின்னான வகையில் பதிலளித்தமை போன்ற காரணங்களாலேயே குறிப்பிட்ட சந்தேகநபர்களைத் தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts: