கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் நாட்டில் ஆயிரத்து 488 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 75 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 804 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 46 ஆயிரத்து 241 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 11ஆம் திகதி நாட்டில் மேலும் 31 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமையினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

16 ஆண்களும் 15 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது.

000

Related posts: