கேப்பாபுலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்!
Thursday, February 9th, 2017
கேப்பாபுலவில் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கவனயீர்ப்பு நிகழ்வொன்று எதிர்வரும் வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக நடைபெறவுள்ளதாக சமூக வலைத்தள இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்
கறித்த நிகழ்வு காலை ஒன்பது மணி முதல் பதினோரு மணி வரை அமைதி வழியில் நிகழ்த்துவதற்கானதும் அதனைத் தொடர்ந்து கேப்பாபுலவிற்கு செல்வதற்கானதுமான நிகழ்விற்கு கேப்பாபுலவு மக்களிற்காக ஒன்றிணையும் சமூக வலைத்தள இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
விரும்பியவர்கள் ஒன்றுகூடல் முடிந்த பின் கேப்பாபுலவிற்கு செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 11 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கேப்பாபுலவுக்கு சென்று, மாலையில் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Related posts:
இன்னும் கொரோனா அச்சம் நீங்கவில்லை - இலங்கையை எச்சரிக்கும் சுகாதார பணிப்பாளர்!
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைக்கு முக்கியத்துவம் - அமைச்சரவை பேச...
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை - டெங்கு தொற்றுப் பரவல் தொடந்தும் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!
|
|
|
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம...
புலம்பெயர் தமிழர்களின் உதவியை எதிர்பார்த்தே தடையை நீக்குகின்றோம் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டம் - ஐ.நாவின் 42 ஆவது அமர்வில் அமைச்சர் அலி...


