குடாநாட்டில் ஈரக் காற்றினால் காய்ச்சல் பரவுகிறது

Saturday, February 11th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை வேளையில் வீசும் ஈரப்பதன் நிறைந்த காற்றினால் பாதகமான குளிர்ந்த காற்றினால் மிகப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக்க் குறிப்பாகக் குழந்தைகள் பெரியளவில் உடல் நலம் பாதிப்புற்றுள்ளார்கள்.

சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் பெரும் எண்ணிக்கையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் வெளிநோயாளர் பிரிவில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ்.அரச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாணவர்களைப் பாடசாலை நேரத்தில் வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்ல வேண்டிய நிலையம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. காய்ச்சல் நொயின் பாதிப்புக் குறித்துச் சுகாதாரப் பிரிவினரும் சுகாதாரத் தொண்டர்களும் தொடர்நது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி வருகின்றனர்.

FEVER-2

Related posts: