கிளிநொச்சி மாவட்டத்தில் 142 ஏக்கர் காணி விடுவிப்பு- அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்!
Wednesday, September 7th, 2016
படையினரின் வசமிருந்த 142 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான மற்றும் அரச காணிகள் என்பன படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் தற்போது இக்காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பகுதிக்காணிகள் விடுவிக்கப்பட்டன. இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது: கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (02-) குறித்த காணிகள் தொடர்பான விபரங்கள் தனக்குக் கிடைக்கப்பெற்றன.
அதாவது கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவில் உள்ள 109 ஏக்கரும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 25 ஏக்கரும், பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 6 ஏக்கரும், விடுவிக்கப்பட்டுள்ளது.விடுவிக்கப்பட்ட காணிகளில் பயிர் செய்கை காணிகள், குடியிருப்புக்காணிகள் என்பனவும் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். விடுவிக்கப்பட்ட காணிகளிலிருந்து வெளியேறும் படையினர் அக்காணிகளை அந்தப்பிரதேச செயலர்களிடம் கையளித்து வருகின்றனர்.
நேற்திறு முன்தினம் (05)- கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவில் சிறுவர் இல்லம் இயங்கி வந்த காணிகள் மற்றும் ஏனைய காணிகள் என்பன உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
Related posts:
|
|