கால்நடையை துரத்திச் சென்ற சிறுவர்கள் இருவர் பரிதாபப் பலி!

Friday, March 16th, 2018

 

மன்னார் மடு காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட காக்கேயன் குளம் பகுதியில் வீடொன்றுக்கு பின்புறம் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு சிறுவர்களும் கால்நடை ஒன்றை துரத்திச் சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

Related posts: