காரைநகர்ப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காசநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு !

Wednesday, November 16th, 2016

யாழ்.காரைநகர்ப் பிரதேச செயலகத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(15)  யாழ்ப்பாணம் பண்ணை மார்பு  நோய்ச் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் காசநோய்க் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நிகழ்வு இடம்பெற்றது.

காரைநகர்ப் பிரதேச செயலர் திருமதி தே.பாபு குறித்த கருத்தரங்கைச் சம்பிரதாயபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.  யாழ்.மாவட்டக் காசநோய்க் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்திய அதிகாரி கௌரி செல்வரட்ணம் இதன் போது கலந்து கொண்டு காசநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துரையை வழங்கினார்.  கருத்தரங்கில் உத்தியோகத்தர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றன.

unnamed (1)

Related posts: