காணாமற்போன 14 பேரின் உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு!

Sunday, May 22nd, 2016

கேகாலை அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தவர்களில் 11 பெண்கள் 05 ஆண்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 14 பேரின் உடற்பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

அரநாயக்க மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை மண்சரிவில் சிக்கி காணாமற்போயுள்ளவர்களில் 77 பெண்களும் 62 ஆண்களும் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தொடரும் மழையுடனான வானிலைக் காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

Related posts: