காணாமற்போனோர் விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதி கிளிநொச்சியில்!
Saturday, April 23rd, 2016காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான இறுதிக்கட்ட அமர்வுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் ஆணைக்குழு தனது சாட்சி விசாரணை அமர்வுகளை நிறைவுசெய்துள்ளது.
இதற்கமைய வடக்கிற்கான இறுதிக்கட்ட அமர்வு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த சாட்சி விசாரணை அமர்வுகளில் சாட்சியமளிப்பதற்காக கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுகளில் காணாமற்போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை செய்துள்ளவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
.
Related posts:
வடக்கின் முதல்வருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை!
புத்தாண்டு கொத்தணியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்ளை நாளாந்தம் அதிகரிப்பு - சுகாதார அமைச்சு சுட்டிக்கா...
அடுத்த கட்ட பேச்சின் போது சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கே முதலில் ...
|
|