கல்வி அமைச்சர் மற்றும் சில அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு!
Saturday, May 7th, 2016
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய பரிசோதனை உற்பத்தி உதவி அதிகாரிகள் சங்கம் தயாராகிறது. இதனை அந்த சங்கத்தின் முதன்மைச் செயலாளர் ஜகத்குமார தெரிவித்துள்ளார்.
15 கோடி ரூபா நட்டஈடு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே 1ஆம் திகதி தமது மே தின கூட்டத்தை பத்தரமுல்ல-அப்பே கம வளாகத்தில் நடாத்த தடை விதித்தமைக்கு எதிராகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிக்கியிருந்த இரு கப்பல்கள் மீட்பு!
தனிநபர்களின் நிவாரணத்திற்காக வழங்கப்பட்டிருந்த காலத்தை நீட்டிக்க இலங்கை மத்திய வங்கி முடிவு!
நாட்டில் நேற்று 2,289 பேருக்குக் கொரோனா தொற்றுதி - சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெர...
|
|
|


