கப்பலுடன் படகு மோதி விபத்து!

Thursday, July 6th, 2017

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை மீனவத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு படகுகள், கப்பல் ஒன்றில் மோதியதால் விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் சிக்கிய ஒரு படகில் இருந்த மீனவர்களை, அருகிலிருந்த மற்றுமொரு படகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.  எனினும், கப்பலுடன் மோதிய மற்றைய படகில் இருந்த மூவரில் ஒருவர் காப்பாற்றப்பட்ட நிலையில், இருவர் காணாமல் போயுள்ளனர்.
குறித்த இருவரையும் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: