கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வகை 1சீ யாக உயர்வு!

Tuesday, February 5th, 2019

பாடசாலை வகை ii ஐச்சேர்ந்த கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கடந்த நான்காம் திகதி தொடக்கம் பாடசாலை வகை 1சீ தரத்துக்கு உயர்த்தப்பட்டு மகாவித்தியாலயமாக மாற்றப்பட்டுள்ளதென வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் சி.சத்தியசீலன் தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.

இப் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிறந்த கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைப் பெறுபேறுகளை மதிப்பீடு செய்து கடந்த வருடம் தரம் உயர்த்தப்பட்டு ஜி.சி.ஈ. உயர்தர கலைத்துறை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் மாகாண கல்வி அமைச்சினால் உத்தியோகபூர்வமாக தரம் உயர்வுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது தென்மராட்சி கல்வி வலயத்தில் பாடசாலை வகை 1சீ தரத்தில் 6 மகாவித்தியாலங்களாக அதிகரித்துள்ளன. வலயத்தில் பாடசாலை வகை 1ஏபி தரத்தில் 6 கல்லூரிகளும் பாடசாலை வகை ii சேர்ந்த 20 பாடசாலைகளும் உள்ளன.

Related posts: