ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பதவிக்கு செல்வதற்கு தயாராகும் வெளிவிவகார அமைச்சர்?

Tuesday, October 4th, 2016

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன்.

தனது அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ள அவர் ஜக்கிய நாடுகள் சபையின் உயர் பதவிக்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இலங்கையில் அரசியலில் தற்போது சில அவப்பெயர்களை சந்தித்து வரும் அமைச்சர், ஜக்கிய நாடுகள் சபையின் உயர் பதவியை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படகின்றது. இதற்கமைய 2020ஆம் ஆண்டளவில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது உள்நாட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என நம்பப்படுவதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Minister-Mangala-Samaraweera-640x400

Related posts: