எல்லைதாண்டிய 10 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!
Wednesday, March 22nd, 2017
இலங்கையின் எல்லைக்குட்பட்ட நெடுந்தீவு வடக்கு கடற்பிரதேசத்தில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கடல் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இவர்களை நேற்று கைதுசெய்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய ரோலர் மீன்பிடி வள்ளங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்பிடி கடற்றொழில் பணிப்பாளரிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ. சேனநாயக்க அவர்களின் நினைவுகல்லை மீளவு...
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மணலை இறக்குமதி செய்யத் திட்டம் - சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரி...
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி சிலர், வர்த்தகர்களிடம் பணம் வசூலிப்பு - உள்...
|
|
|


