எல்லைதாண்டிய நான்கு மீனவர்கள் கைது!
Tuesday, November 1st, 2016
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராமேஸ்வரத்திலிருந்து கார்த்திகேயன் என்பவரது விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களான இராமர், முனியசாமி, ராஜேந்திரன் மற்றும் முனியசாமி ஆகிய நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
Related posts:
தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை - அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!
நாடு முழுவதிலும் சுமார் 600 போலி சாரதி பயிற்சி நிலையங்கள் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரி...
|
|