உரமானிய யோசனை அடுத்த வாரம் அமைச்சரவை அனுமதிக்கு!

Thursday, March 24th, 2016

தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு செய்கைக்கான உரமானியத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவை அனுமதிக்கு சமர்பிக்கப் படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.

இதற்காக 20 கோடி ரூபா ஒதுக்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.

ஒவ்வொரு பயிர்செய்கையின் போது ஹெக்டேயர் ஒன்றிக்கு மாத்திரமே உரமானியம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வங்கிகளின் ஊடாக விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் உப்லி மாரசிங்க தெரிவித்தார்.

Related posts: