இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

Sunday, August 1st, 2021

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் விஜித்த ஹேரத், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர், தனது கடமைகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜகத் வெள்ளவத்த அண்மையில் நீக்கப்பட்டார். இந்நிலையிலேயே விஜித்த ஹேரத் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கொரோனா தொற்றுக் காரணமாக தொழிலை இழந்த வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு விசேட காப்புறுதித...
இயலுமை உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு - பிரதமர் ரணில் விக்கிரமசிங...
இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் - பங்களிப்புச் செய்ய முன்வர வேண்டும் என...