இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து இந்தியா மகிழ்ச்சி!
Monday, March 14th, 2016இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுடில்லி விஜயத்தின் போது பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். இதன்போது தாம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் பலமிக்க நாடு என்ற வகையில் இந்தியா தமது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். புதுடில்லியில் மார்ச் 11 முதல் 13 வரை இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காகவே அமைச்சர் ரவி கருணாநாயக்க அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.ய
Related posts:
காணாமல் போனோர் தொடர்பாக நிரந்தர அலுவலக சட்டம்!
பல இலட்சம் பெறுமதியான முதிரைக் குற்றிகளுடன் ஒருவர் கைது !
ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் போதைப்பொருட்களுக்கு அடிமை - புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபையின் ஆ...
|
|